Posts

Showing posts from October, 2018

காசிக்குச் சென்றால் எதை விட்டு வரவேண்டும்????

Image
இறைவன் ஒருவனே கதி என மனதில் தியானித்து இருக்க வேண்டும் என்கிற அர்த்தத்தில் தான், பழையவைகள் அனைத்தையும் விட்டுவிட்டு வந்துவிட வேண்டும் என்றார்கள். காசி, ராமேஸ்வரம் என்றதுமே, அது வயதானப் பின் செல்ல வேண்டிய இடம் என்பது பொதுவாக பெரும்பாலான மக்களின் எண்ணம். வாழ்க்கையில் தங்களின் கடமைகளை நிறைவேற்றியவர்கள், இதற்கு மேல் தங்களுக்கு வாழ்க்கையில் எதுவும் இல்லை என்று காசி, ராமேஸ்வரப் புனிதப் பயணம் மேற்கொள்வது வழக்கம். ஆனால் இந்த கடமைகளை முடித்தவர்கள் மட்டுமே செல்ல வேண்டும் என்ற நியதி ஏதுமில்லை. காசியும், ராமேஸ்வரமும் ஆன்மிக அதிர்வலைகள் அதிகமுள்ள திருத்தலங்கள். இன்றைக்கும் நாட்டின் பல பகுதிகளில் இருந்து அனைத்து வயதினரையும் காசி, ராமேஸ்வர தளங்களில் பார்க்க முடியும். காசி என்பது முக்தி தலமாக போற்றப்படுகிறது. பிறவா வரம் வேண்டி இறைவனின் திருத்தலங்களை நாடிச் செல்லும் பக்தர்கள், புண்ணிய நதியான கங்கையில் நீராடி விட்டு, முன்னோர்களுக்காக பிண்டம் வைத்து வேண்டுதல் செய்வர். காசியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் அவர்களின் ஆசி பரிபூரணமாக கிட்டும் என்பது நமது இந்து மத நம்பிக்கை.இந்துக்களின் புனி...

பகவத் கீதையின் பொருள் என்ன ?????

Image
வாழ்வில் வரும் அனைத்து சுக துக்கங்களையும் இறைவனிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்பது தான் பகவத் கீதையில் தத்துவமாகும். பகவத்கீதையை ‘பகவத்கீதா’ என்று சொல்வதும் வழக்கம். ‘பகவத்’ என்றால் ‘இறைவன்’. ‘கீதா’ என்றால் ‘நல்ல உபதேசம்’. இதற்கு இன்னொரு பொருளும் உண்டு. ‘கீதா’ என்ற சொல்லை வேகமாகச் சொல்லும் போது ‘தாகீ’ என்று மாறும். ‘தாகீ’ என்றால் ‘தியாகம்’ என்று பொருள்.  வாழ்வில் வரும் அனைத்து சுக துக்கங்களையும் இறைவனிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்பது இதன் தத்துவமாகும். ‘துறவு கொள்ளுங்கள், எல்லாவற்றையும் விட்டுவிடுங்கள்’ என்பதும் ‘கீதா’விற்குரிய ஆழமான பொருளாகும்.  அர்ச்சுனன் தன் உறவினர்கள் மீது அம்பெய்யத் தயங்கிய போது, ‘தர்மத்தைக் காக்க அவர்களை அழித்தாலும் தவறில்லை. அதற்குரிய பலாபலன்கள் என்னையே சேரும்’ என்று பகவான் கிருஷ்ணர் கூறினார்.  எனவே, எந்தச் செயலைச் செய்தாலும் அதன் பலனை இறைவனுக்கே அர்ப்பணித்து விட வேண்டும் என்பதே கீதையின் பொருள். எனவே தான் கீதை இந்துக்களின் ஐந்தாவது வேதமாக விளங்குகிறது.

பித்ருதோஷம் என்றால் என்ன???????

Image
நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ரு தோஷம் எனப்படும். பித்ரு தோஷத்தை ஜாதகத்தில் கண்டறிவது எப்படி? ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகுவுடனோ அல்லது கேதுவுடனோ எந்த இடத்தில் சேர்ந்த்திருந்தாலும் பித்ரு தோஷம் உண்டு. பித்ரு தோஷத்தக்கு என்ன பரிகாரம் செய்யவேண்டும்? ராமேஸ்வரம் சென்று தில ஹோமம் செய்வதும், கயா சிரார்த்தம் செய்வதும், காசி, அலகாபாத், பத்ரிநாத் சென்று திவசம் செய்வதும், திருவெண்காடு சென்று திதி கொடுப்பதும் இந்த தோஷத்துக்குப் பரிகாரம். குடும்பத்தில் யாரேனும் விபத்துக்களில் இறந்திருந்தாலோ, அல்லது தற்கொலை செய்துகொண்டிருந்தாலோ மட்டுமே தில ஹோமம் செய்யவேண்டும். அனைவரும் இயற்கை மரணம் அடைந்திருந்தால், தில ஹோமம் செய்ய வேண்டியதில்லை. பித்ரு தோஷத்தினால் ஏற்படும் தீய விளைவுகள் என்ன? பித்ரு தோஷம் உள்ளவர்களுக்கு சிக்கிரம் திருமணம் நடக்காது. மிகவும் தாமதமாக நடக்கும். விவாகரத்து ஏற்படலாம். அல்லது தம்பதியரிடையே அன்னியோன்னியம் இருக்காது. அல்லது குழந்தைப் பாக்கியம் இருக்காது. ஒரு சிலருக்கு கடுமையான...

நவராத்திரி ஸ்லோகம்......

Image
நவராத்திரி நாளில் தேவி தன்னைப் பூஜித்தவருக்கு வேண்டியவற்றையெல்லாம் கொடுப்பாள் என்று சொல்வார்கள். இன்றைய தினம் சொல்ல வேண்டிய ஸ்லோகத்தை பார்க்கலாம் . ஸ்லோகம் :- கிராஹுர் தேவீம் த்ருஹிண க்ருஹிணீ மாகமவிதோ ஹரே: பத்நீம் பத்மாம் ஹரஸ ஹசரீ மத்ரித நயாம்! துரீயா காபி த்வம் துரதிகம் நிஸ்ஸீம மஹிமா மஹாமாயா விச்வம் ப்ரமயஸி பரப்ரஹ்ம மஹிஷி!! பொருள் : -                     இறைவனோடு இணைந்திருக்கும் சக்தியே! வேதங்களின் உட்பொருளை உணர்ந்தவர்கள் உன்னை சரஸ்வதி என்றும், லட்சுமி என்றும், சிவனின் பத்தினியாகிய பார்வதி என்றும் பலவிதமாகக் கூறுகிறார்கள். மனதிற்கும் வாக்கிற்கும் அப்பாற்பட்டவளே! எல்லையற்ற மகிமை கொண்டவளே! மகாமாயாவாக இருந்து உலகை இயக்கச் செய்து பிரமிக்க வைப்பவளே! அருள்புரிவாயாக.

குரு கவசம் எதற்கு ????????

Image
நவக்கிரகங்களில் சுபகிரகம் என்று வர்ணிக்கப்படுபவர் குரு பகவான். குருப்பெயர்ச்சியான இன்று குரு கவசம் பாடி வழிபட்டால் அவரது அருள்மழையில் திளைத்து பொருள் வளத்தைப்பெருக்கிக் கொள்ளலாம். ‘ வானவர்க்கு அரசனான வளம் தரும் குருவே ’   என்ற குரு கவசப்பாடலை அவர் சன்னிதியில் பாடி வழிபட்டால் அவரது அருள்மழையில் திளைத்து பொருள் வளத்தைப்பெருக்கிக் கொள்ளலாம். குருவே நீபார்த்தால் போதும் கோடியாய் நன்மை சேரும்! திருவருள் இணைந்தால் நாளும் திருமணம் வந்து கூடும்! பொருள்வளம் பெருகும் நாளும் பொன்னான வாழ்வும் சேரும்! அருள்தர வேண்டி உன்னை அன்போடு துதிக் கின்றோமே! என்று குரு கவசம் எடுத்துரைக்கின்றது. மாலை கிடைக்க வேண்டுமானாலும், மழலை பிறக்க வேண்டுமானாலும் குரு பகவான் தான் பச்சைக்கொடி காட்ட வேண்டும். 

கணபதி மந்திரங்கள்........

Image
ஸ்ரீவல்லப   மஹா   கணபதி   மந்திரம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதயே வர வரத சர்வ ஜனம்மே வசமானய ஸ்வாஹா தன   ஆகர்ஷண   கணபதி   மந்திரம் ஓம் க்லாம் க்லீம் கம் கணபதயே வரவரத மம தன தான்ய சம்ருத்திம் தேஹி தேஹி ஸ்வாஹா வ்ராத   கணபதி   மந்திரம் ஓம் நமோ வ்ராத பதயே நமோ கணபதயே நம: ப்ரமதபதயே நமஸ்தேஸ்து லம்போதராய ஏகதந்தாய விக்னவிநாசினே சிவ சுதாய வரத மூர்த்தயே நமோ நம: சக்தி   விநாயக   மந்திரம் ஓம் ஹ்ரீம் க்ரீம் கணபதயே நம: விநாயகர்   காயத்ரி ஓம் தத்புருஷாய வித்மஹே;  வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி:  ப்ரசோதயாத் ஸ்ரீலட்சுமி   கணபதி   மந்திரம் ஓம் ஸ்ரீம்கம் சௌம்யாய லட்சுமி கணபதயே வரவரத சர்வதனம்மே வசமானய ஸ்வாஹா சர்வ   வித்யா   கணபதி   மந்திரம் ஐம் ப்ளூம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதயே வர வரத ஐம் ப்ளூம் சர்வ வித்யாம் தேஹி ஸ்வாஹா செய்யும்   காரியங்களில்   தடைகள்   விலக மஹா கணபதிர் புத்தி ப்ரிய: ஷிப்ர ப்ரஸா...

லட்சுமி கடாட்சம் எப்படி கிட்டும்???????

Image
லட்சுமி கடாட்சம் எப்படி கிட்டும்...... லட்சுமி கடாட்சம்   பெற  சில வழிபாட்டு குறிப்புகள் 1) வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் கல்கண்டுபோட்டு தீபம் ஏற்ற லட்சுமி கடாட்சம் ஏற்படும். 2) வீட்டில் பல வித ஊறுகாய் வைத்திருக்கவும். ஏனெனில் குபேரன் ஊறுகாய் பிரியர். எனவே பல வித ஊறுகாய் வைத்திருக்க குபேர சம்பத்து வரும். 3) இறை பக்தியில் இருப்பவர்களிடம் ஆசி பெறுவது புண்ணிய பலம் கூடும். பண வரவு அதிகரிக்கும். 4) அபிஜித் நட்சத்திரத்தில் (பகல் 12 மணி) அரவாணிக்கு திருப்தியாக உணவளித்து அவள் கையால் பணம் பெற பணம் நிலைத்திருக்கும். 5) பசுவின் கோமியத்தில் தினமும் சிறிதளவு குளிக்கும் நீரில் கலந்து குளிக்கவும், வீட்டில் தெளிக்கவும். 45 நாட்கள் விடாமல் செய்திட தரித்திரம் தீர்ந்து பணம் வரும்.

இன்றைய விசேஷங்கள்:

Image
3-ந்தேதி (புதன்) : * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை. * சமநோக்கு நாள்.

தமிழ் மாதமும் தானமும்......

Image
தமிழ் மாதம் பன்னிரண்டிலும் செய்ய வேண்டிய தானம்

ஆறுபடை வீடுகளை வழிபடுவதால் என்ன கிட்டும்.....

Image
முருகனின் அறுபடை வீடுகளில் எந்த திருத்தலத்தில் வழிபாடு செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பது பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம். திருப்பரங்குன்றம் - திருமணம் கைகூடும் திருச்செந்தூர் - கடலில் நீராடி வழிபட்டால் நோய் பகை நீங்கும் பழனி - தெளிந்த ஞானத்தை வழங்குவார் சுவாமிமலை - மகிழ்வான சுகவாழ்வு கிட்டும் திருதணிகை - கோபம் நீங்கி நல்வாழ்வு அமையும் பழமுதிர்சோலை - பொன், பொருள் சேரும். இதுதவிர,   திருத்தணி - காதல் திருமணம் நடக்கவும்   திருப்பரங்குன்றம்  - டாக்டர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் வெற்றிக்காகவும் பழமுதிர்சோலை -கர்மதோஷம் விலகவும் வழிபடுபவர்களும் ஏராளம். 

தெய்வத்தை வணங்கினால் என்ன குறை தீரும்.....

Image
ஆகையால் எந்த தெய்வத்தை வணங்கினால் என்ன குறை தீரும் என்பதை பற்றிப் பார்ப்போம். விக்னங்கள், இடையூறுகள் நீங்க -  ஸ்ரீ விநாயகர் செல்வம் சேர - ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீநாராயணர்  அழியாச் செல்வம், ஞானம், சக்தி பெற - ஸ்ரீ சிவஸ்துதி கல்வியில் சிறந்து விளங்க -  ஸ்ரீ சரஸ்வதி  திருமணம் நடைபெற - ஸ்ரீகாமாட்சி அம்மன்,  ஸ்ரீ துர்க்கை  மாங்கல்யம் நிலைக்க -  ஸ்ரீ மங்கள கௌரி  புத்திர பாக்கியம் பெற -  ஸ்ரீ சந்தான கிருஷ்ணன், ஸ்ரீ சந்தான லட்சுமி  தொழில் சிறந்து லாபம் பெற -  ஸ்ரீ திருப்பதி வெங்கடாசலபதி வீடும், நிலமும் பெற - ஸ்ரீசுப்ர மண்யர், ஸ்ரீ செவ்வாய் பகவான் பில்லி, சூன்யம், செய்வினை அகல - ஸ்ரீவீரமாகாளி, ஸ்ரீநரசிம்மர் நோய் தீர - ஸ்ரீதன்வந்தரி,   ஸ்ரீ தட்சிணாமூர்த்தி  ஆயுள், ஆரோக்கியம் பெற -  ஸ்ரீ ருத்திரன்  மனவலிமை, உடல் வலிமை பெற -  ஸ்ரீ ராஜராஜேஸ்வரி, ஸ்ரீஆஞ்சநேயர் விவசாயம் தழைக்க - ஸ்ரீதான்யலட்சுமி உணவுக் கஷ்டம் நீங்க - ஸ்ரீஅன்னபூரணி ...

அங்காளம்மன் காயத்ரி மந்திரம்.....

Image
கீழே உள்ளது அங்காளம்மனின் காயத்ரி மந்திரமாகும். மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தை சுற்றி வரும்போது இந்த காயத்ரி மந்திரத்தை ஜெபித்தப்படி வலம் வருவதல் வேண்டும். ஓம் காளிகாயை வித்மஹே  மாதாஸ்வ ரூபாயை தீமஹி,  தன்னோ அங்காளி ப்ரசோதயாத்  என்பது அங்காளம்மனின் காயத்ரி மந்திரமாகும். மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தை சுற்றி வரும்போது இந்த காயத்ரி மந்திர த்தை ஜெபித்தப்படி வலம் வருவதல் வேண்டும். இப்படி வழிபாடு செய்பவர்களுக்கு அங்காளம்மன் இரட்டிப்பு பலன்களை வாரி, வாரி வழங்குவாள் என்பது ஐதீகமாகும்.

விஷ்ணுக்குரிய விரதங்கள் - வழிபாடுகள்......

Image
மஹாவிஷ்ணு தீயோரை தண்டித்து நல்லவர்களை காக்கும் கடவுள் மட்டுமன்று. அவரை விரதம் இருந்து வழிபடுவதால் வாழ்வில் மகிழ்ச்சி பெருகும். ஒரு பௌர்ணமி அன்று, மஹாவிஷ்ணுக்கு முதல் பூஜையை தொடங்க வேண்டும். அடுத்து ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் இந்த பூஜையை தொடர வேண்டும். இந்த பூஜை செய்வதால் மகிழ்ச்சி மட்டுமன்று, செல்வம் சேரும், புகழ் கிட்டும், பொருளாதார சிக்கல் தீரும். மஹாவிஷ்ணு பூஜைக்கு தேவையான பொருள்கள் : நிறை நாழி நெல், துளசி தளம், வாசனை திரவியங்கள், இனிப்பு பலகாரங்கள், நெற்பொரி, செங்கதலிப்பழம், பால், தேன், இளநீர், துருவிய தேங்காய், வெல்லம் ஆகியன சேர்த்து பிசைந்த அவல், கற்பூரம், ஊதுபத்தி ஆகியவற்றை தயாரித்து வைத்துக்கொள்ள வேண்டும் . பௌர்ணமியன்று, வீட்டிலுள்ள ஓர் அறையை சுத்தம் செய்து, கிழக்கு முகமாக ஒரு பீடம் அமைக்க வேண்டும். அந்த பீடத்தில் துளசி தளம் நிரப்பி அதன் மீது நிறை நாழி நெல் வைக்க வேண்டும். துளசி தளத்தால் கட்டிய சரங்களால் நிறை நாழியை அலங்காரம் செய்ய வேண்டும். பின் அதற்கு மஞ்சள், குங்குமம் திலகமிடவும். அதனருகே, நெய் ஊற்றி ஏற்றிய விளக்கை வைக்கவும். தனியாக ஒரு தட்டில் அருகம்...

108 துர்க்காதேவி போற்றி.....

Image
ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி ஓம் ஆதி பராசக்தியே போற்றி ஓம் அபிராமியே போற்றி ஓம் ஆயிரங்கண்கள் உடையவளே போற்றி ஓம் அம்பிகையே போற்றி ஓம் ஆசைகளை அறுப்பாய் போற்றி ஓம் அன்பின் உருவே போற்றி ஓம் ஆபத்தைத் தடுப்பாய் போற்றி ஓம் அச்சம் தீர்ப்பாய் போற்றி ஓம் ஆனந்தம் அளிப்பாய் போற்றி ஓம் அல்லல் தீர்ப்பாய் போற்றி ஓம் ஆற்றல் தருவாய் போற்றி ஓம் இமயவல்லியே போற்றி ஓம் இல்லறம் காப்பாய் போற்றி ஓம் இரு சுடர் ஒளியே போற்றி ஓம் இருளை நீக்குவாய் போற்றி ஓம் ஈசனின் பாதியே போற்றி ஓம் ஈஸ்வரியே போற்றி ஓம் உமையவளே போற்றி ஓம் உளைமான் கொண்டாய் போற்றி ஓம் உள்ளரவம் தீர்ப்பாய் போற்றி ஓம் உற்சாகம் அளிப்பாய் போற்றி ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி ஓம் ஊக்கம் அளிப்பாய் போற்றி ஓம் என் துணை இருப்பாய் போற்றி ஓம் ஏக்கம் தீர்ப்பாய் போற்றி ஓம் எம்பிராட்டியே போற்றி ஓம் ஏற்றம் அளிப்பாய் போற்றி ஓம் ஐமுகன் துணையே போற்றி ஓம் ஐயுறு தீர்ப்பாய் போற்றி ஓம் ஒளிர்வு முகத்தளவே போற்றி ஓம் ஓச்சம் அளிப்பாய் போற்றி ஓம் கங்காணியே போற்றி ஓம் காமாட்சியே போற்றி ஓம் கடாட்சம் அளிப்பாய் போற்றி ஓம் காவல் தெய்வமே...