Posts

Showing posts from November, 2018

அனைத்து செல்வங்களையும் தந்து, பல பிரச்சனைகளை தீர்க்கும் தீபத்தின் வகைகள்...

Image
தீபத்தில் மகாலட்சுமி வசிப்பதால், தீபம் ஏற்றியதும் `தீபலட்சுமியே நமோ நம’ என்று கூறி வணங்குவது அவசியம். தீபத்தை பலவகையாகச் சொல்லி விளக்குகின்றன ஞானநூல்கள். அவற்றில் சில… சித்ர_தீபம்: தரையில் வண்ணப் பொடி களால் சித்திரக் கோலம் இட்டு, அதன்மீது ஏற்றப்படும் தீபங்கள். மாலா_தீபம்: அடுக்கடுக்கான தீபத் தட்டுகளில் ஏற்றப்படுவது. ஆகாச_தீபம்: வீட்டின் வெளிப்புறத்தில் உயர்ந்த பகுதியில் ஏற்றி வைக்கப்படுவது, ஆகாச தீபமாகும். கார்த்திகை மாதம் சதுர்த்தி திதிநாளில் இந்த தீபத்தை ஏற்றி வழிபட்டால், யம பயம் நீங்கும். ஜல_தீபம்: நதி நீரில் மிதக்க விடப்படும் தீபங்கள் ஜல தீபம் ஆகும். நௌகா (படகு) தீபம்: கங்கை கரையோரங்களில் வாழும் மக்கள், புண்ணிய யாத் திரையாக கங்கைதீரத்துக்குச் செல்பவர் கள், கங்கை நதிக்கு மாலைவேளையில் ஆரத்தி செய்து, வாழை மட்டையின் மீது தீபம் ஏற்றிவைத்து, அதை கங்கையில் மிதக்கவிடுவர். படகு போன்ற வடிவங் களில் தீபங்கள் தயார் செய்தும் மிதக்க விடுவார்கள். இவற்றையே நெளகா தீபங் கள் என்று அழைப்பர். சம்ஸ்கிருதத்தில் `நௌகா’ என்றால் `படகு’ எனப் பொருள். சர்வ_தீபம்: வீட்டின் அனைத்து பாகங் கள...

கல்யாணவரம் அளிக்கும் திருக்கோவில்!!!!

Image
  காஞ்சீபுரம் அடுத்த செவிலிமேடு பகுதியில் அமைந்துள்ளது சௌந்தர்யவல்லி சமேதே ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் . காஞ்சீபுரம் நகரத்தில் இருந்து ஏறத்தாழ 3 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. ஏறத்தாழ 800 ஆண்டுகளுக்கு முன்பு பல்லவ வம்சத்தின் கடைசி மன்னரான ராஜேந்திர பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம் . இந்த கோவிலில் செவ்வாய், சனிக் கிழமைகளில் நெய் விளக்கு ஏற்றி பயபக்தியுடன் சுவாமியை வழிபட்டால் திருமண வரம் கைகூடும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. திருக்கோயிலின் கருவறையில் பிரம்மாண்டமான முறையில் எழுந்தருளி அருள்பாலிக்கும் நரசிம்ம மூர்த்தியின் மடியில் காண்போரை பக்தி பரவசத்துடன் கவரும் சாந்த சொரூபியாக தாயர் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். சித்ரா பவுர்ணமி அன்று காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் இந்த திருக்கோவிலுக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார் மேலும் திருக்கோவில் சார்பினில் மண்டகப்படியும் நடைபெறும். திருக்கோயிலின் ஈசான்ய பாகத்தில் கிழக்கு கைலாச நாதரும் வடக்கு மூலையில் மேற்கு நோக்கி அமர்ந்து கைலாச நாதரும் பக்தர்களுக்கு காட்சி ...

எந்தத் திசையில் தலைவைத்துப் படுப்பது நல்லது?

Image
ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரிய கருத்துக்களையும் நம் மூதாதையர்கள் சொல்லியிருக்கிறார்கள். அவற்றில் ஒன்று தான் நாம் தூங்கும் திசையில் எது உகந்த திசை என்பதாகும்.  தொன்று தொட்டு நம் மூதாதையர்கள் பல சம்பிரதாயங்களைச் சொல்லி வைத்திருக்கின்றார்கள். ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரிய கருத்துக்களையும் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அவற்றில் ஒன்று தான் நாம் தூங்கும் திசையில் எது உகந்த திசை என்பதாகும். பொதுவாக வடக்கிலே தலைவைத்துப் படுத்தால், வம்சம் விருத்தியடையாது என்பார்கள். ஆனால் வடக்கிலே வாழை குலை தள்ளினால், வம்ச விருத்தி ஏற்படும். வாரிசு இல்லாத வீட்டில் வாரிசு உருவாக வழிபிறக்கும். தெற்கில் தலை வைப்பதும் அவ்வளவு நல்லதல்ல. கிழக்கு மற்றும் மேற்கு திசைகள் தான், தலைவைத்துப் படுத்துத் தூங்குவதற்கு ஏற்ற திசையாக ஆன்றோர்கள் சொல்லி வைத்திருக்கின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக கிழக்குப் பக்கம் பார்த்து தலை வைத்துத் தூங்குவதே கீர்த்தியைத் தரும். காரணம் ராஜ கிரகமான சூரியன் உதிப்பது அந்த திசையில் தான்.